பேஸ்புக்கில் பெண்கள் குறித்து அநாகரீகமான தகவலை வெளியிட்ட இளம்பெண் கைது
பேஸ்புக்கில் பெண்கள் குறித்து அநாகரீகமான தகவலை வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு கோவாவின் கன்கொலியம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இளம்பெண் போலி பெயர், புகைப்படம் மற்றும் விபரங்களை கொடுத்து 8 கணக்குகளை பேஸ்புக்கில் தொடங்கியுள்ளார். என்று போலீஸ் தரப்பில் கைது செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் போலியான பேஸ்புக் கணக்கில் அப்பாவி பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்து பாலியல் தொடர்பான தரக்குறைவான தகவல்கள்களை பதிவு செய்துள்ளார். என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இளம் பெண் பயன்படுத்திய 8 போலி பேஸ்புக் கணக்குகளையும் சைபர் கிரைம் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குற்றவாளியான இளம்பெண் பயன்படுத்திய சாதனங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலி விவரங்களை கொண்டு கணக்கும் தொடங்கும் பழக்கம் இளம்பெண்ணுக்கு இருந்துள்ளது. இளம்பெண் தனது தோழிகளின் பெயரிலே போலி கணக்குகளை தொடங்கியுள்ளார். யாரும் கண்டுபிடித்துவிடாத வண்ணம் காலையிலே பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தி வந்துள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

