ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: இன்று தீர்ப்பு Live
தமிழக முதல்வர் ஜெ., மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
இதற்கென கோர்ட்டில் ஆஜராக ஜெ., அவரது தோழி சசிகலாவுடன் புறப்பட்டு சென்றார். பெங்களூரூ விமான நிலையத்தில் அமைச்சர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 10.40 மணியளவில் கோர்ட்டுக்கு ஜெ., புறப்பட்டு சென்றார்.
பெங்களூரூ கோர்ட்டில் ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராகினர். 11 மணியளவில் நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா தீர்ப்பை படிக்க துவங்கினார்.
1991 முதல் 96ல் முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக ( ரூ. 66 கோடி ) சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்தார். 17 ஆண்டுகாலம் நடந்த வழக்கில் இன்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்படுகிறது. ஜெ., ஆஜராவதை முன்னிட்டு பெங்களூரூ முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தடியடி: இந்நிலையில் இன்று காலையில் நீதிபதி தீர்ப்பை படிக்க துவங்கியதும், ஒசூர்- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், தடுப்புக்களை மீறி நுழைய அ.தி.மு.க.,வினர் முயன்றனர்.
இந்நேரத்தில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
Puthiyathalaimurai TV Live

இதற்கென கோர்ட்டில் ஆஜராக ஜெ., அவரது தோழி சசிகலாவுடன் புறப்பட்டு சென்றார். பெங்களூரூ விமான நிலையத்தில் அமைச்சர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 10.40 மணியளவில் கோர்ட்டுக்கு ஜெ., புறப்பட்டு சென்றார்.
பெங்களூரூ கோர்ட்டில் ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராகினர். 11 மணியளவில் நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா தீர்ப்பை படிக்க துவங்கினார்.
1991 முதல் 96ல் முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக ( ரூ. 66 கோடி ) சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்தார். 17 ஆண்டுகாலம் நடந்த வழக்கில் இன்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்படுகிறது. ஜெ., ஆஜராவதை முன்னிட்டு பெங்களூரூ முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தடியடி: இந்நிலையில் இன்று காலையில் நீதிபதி தீர்ப்பை படிக்க துவங்கியதும், ஒசூர்- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், தடுப்புக்களை மீறி நுழைய அ.தி.மு.க.,வினர் முயன்றனர்.
இந்நேரத்தில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
Puthiyathalaimurai TV Live

