Breaking News

உலகின் முதல் (மனிதன்)நபி ஆதம் அலைஹி வசல்லம் வாழ்க்கை வரலாறு !!


பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்

நாம் பார்க்க விருக்கும் முதல் நபி ஹல்ரத் ஆதம் அலைஹி வசல்லம் அவர்கள் . அவர்களை பற்றி நாம் நமக்கு சிருவயதினில் இருந்து பல கதைகள் கூறப்பட்டிருக்கலாம் அது உண்மையாகும் இருக்கலாம் அது அல்லாஹுவே மிக்க அறிந்தவன் , நாம் அவனின் வரிகளிலேயே அறிவோம் இன்ஷா அல்லாஹ் . 

அல்லாஹு மலக்குகளிடம் மனிதர்களை பற்றி கூறும்பொழுது

" அல்லாஹ் மலக்குகளிடம் நான் பூமியில் எனது பிரதிநிதியை படைக்கபோகிறேன் என்று கூறியதற்கு மலக்குகள் யா அல்லாஹ் இப்பூமியில் குழப்பம் செய்து ரெத்தம் சிந்துபவர்கலையா படைக்க போகிறாய் என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ் நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நான் அறிவேன் என்று கூறினான்
அல்லாஹ் இன்னும் தட்டினால் சப்தம் வரக்கூடிய மாற்றமுடைய கருப்பான களிமண்ணில் இருந்து மனிதனை (ஆதமை ) திட்டமாக் நாம் படைத்தோம் .

அல் ஹிஜ்ர் 6 -26

பிறகு அல்லாஹ் ஆதம் அலைஹி வசல்லம் அவர்களை படைத்தான் படைத்த பிறகு சில பெயர்களை அல்லாஹ் கற்றுகொடுத்தான் பின்பு மலக்குகளிடம் நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாயிருப்பின் நீங்கள் இதன் பெயர்களை விவரியுங்கள் என்று கூறினான் அதற்கு அவர்கள்
யா அல்லாஹ் நீயே தூய்மையானவன் நீ எங்களுக்கு கற்று கொடுத்ததை தவிர வேறு எதனையும் நாங்கள் அறியமாட்டோம்

அப்பொழுது அல்லாஹ் அதம் அலைஹி வசல்லம் அவர்களிடம் நீர் இப்பொழுது அவைகளின் பெயர்களா அவர்களுக்கு விவரிபாயாக என்றான் அதக்கு நமது தந்தை அனைத்தையும் அவர்கள் முன்னால் கூறினார்கள் பிறகு அல்லாஹ் தனது மலக்குகளிடம் நீங்கள் அனைவரும் ஆதமுக்கு மண்டியிட்டு சுஜுது செய்யுங்கள் என்று அப்பொழுது இப்லீஸை தவிர அனைவரும் சுஜூதில் விழுந்தார்கள் அல்லாஹ் அவனிடம் கேட்டான் நீ அவர்களுடன் சேராதிருக்க உனக்கு என்ன ஆயிற்று என்று வினவினான் அதற்க்கு அவன்

அதற்கவன் தட்டினால் சத்தம் வரும் மாற்றமுள்ள களிமண்ணால் நீ அவரை உருவாக்கிய மனிதனுக்கு நெருப்பால் படைக்கப்பட்ட உயர்த்த படைப்பான நான் ஏன் சிரம்பணிய வேணும் என்று அல்ல்ஹுவிடம் வாதிட்டான் . இவன் நமக்கு வேண்டப்பட்டவனாக இன்றைய தினம் நாம அனைவருக்கும் இருக்கிறான் ஆதலால் இவனை பற்றியும் சிறிது குறிப்பை அறிந்து கொள்வோம் இவனின் பெயர் "அசாசீல் " பொதுவாக இவனின் பெயரை நாம் இப்லீஸ் என்றும் ஷைத்தான் என்றும் அறிந்திருக்கிறோம் அனைத்தையும் அல்லாஹுவே மிக்க அறிந்தவனாக இருக்கிறான் மேலும் இவன் ஜின் இணைத்தவை சார்ந்தவனாக இருக்கிறான் , இவனின் வரலாறு இன்றைய அளவில் நமக்கு முகவும் முக்கியமான படிப்பினையாக இருக்கிறது என் என்றால் இவனை பற்றி மார்க்க அரிஞர்கள் கூறுவதாவது இவன் ஒரு மிக பெரும் தக்குவாதாரியாக வாழ்ந்தான் என்றும் இவன் மலக்குகள் அனைவருக்கும் தலைவனாக வாழும் அளவிற்கு இருந்தான் அல்லாஹ்வின் பேச்சை கேட்க மறுத்து அவன் ஆணவம் கொண்டான் நமது படைப்புதான் உயர்த்த படைப்பு மனிதர்கள் தாழ்ந்த படைப்பு என்று ஆனால் அல்லாஹ் ஆணவம் அடைத்த காரணத்தினால் அவர் சபிக்கப்பட்டவனாக மாறினான் . இன்றைய நிலை நமது சமூஹத்தார்களிடமும் உள்ளது என்பதுதான் வருத்தத்திற்கு உரிய விசியம் . அல்லாஹ் படைத்த படைப்பில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே அல்லாஹ் இந்த படிப்பினையை கொடுத்திருகிறான் என்பதை நான் உணர்கிறேன் , நமது மாற்றுமத சகோதரர்கள் இந்த சைத்தானின் சூழ்ச்சிகள் தெரியாமல் உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்று பிரிவினையில் வாழ்கிறார்கள் அல்லாஹ் உங்களுக்கு சோதனைகளை பல மாறியாக தருகிறான் ஒருவனுக்கு பொருள் செல்வதிலும் ,மற்றொருவனுக்கு மக்கள் செல்வத்திலும் , மற்றொருவனுக்கு இதனை அவர்களிடம் இருந்து எடுத்தும் அவர்களை சோதிக்கின்றான் . ஆதால் இத்தஹைய சைத்தானின் குணம் ஆணவம் மற்றும் பெருமை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது நமது இஸ்லாத்தில் துளியளவும் அனுமதிக்க வில்லை என்பது நம்மை படைக்கும் பொழுதே அல்லாஹ் அதனை உணர்த்திவிட்டான் .

மேலும் சைத்தான் அவன் அல்லாஹுவிடன் நீ என்னை மறுமை நாள் வரை வாழ அனுமதி தரவேண்டும் நீ யாருக்காக என்னை நீ வழிகேட்டில் ஆக்கினாயோ அந்த ஆதாமின் சந்ததியினரை நான் வழிகெடுத்து காட்டுவேன் என்று அல்லாஹு விடம் சபதம் ஏற்று வந்திருக்கிறான் ,

" நீ என்னை வலிகேடுத்ததின் காரணமாக ஆதமின் சந்ததியினரை உன்னுடைய நேரான வழியில் (செல்லாது தடை செய்து வழி மறித்து அதில்) அவர்களுக்காக திண்ணமாக உட்காந்து கொள்வேன் . என்றும் அவன் கூறினான்

பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு முன்னும் அவர்களுக்கு பின்னும் அவர்களின் வலப்புறத்திலும் அவர்களது இடப்புறத்திலும் அவர்களுடன் நான் வந்து வலிகேடுத்துக்கொண்டிருப்பேன் மேலும் அதில் பெருபாலான மக்கள் நன்றிசெளுத்துபவர்களாக காண மாட்டாய்"

இகலப்பட்டவனாகவும் , விரட்டபட்டவனாகவும் இதிலிருந்து நீ வெளியேறி விடு நிச்சயமாக (உன்னையும் ) அவர்களில் உன்னை பின்பற்றுவோர்களையும் . உங்கள் அனைவரில் இருந்தும் நிச்சயமாக நரகத்தை நாம் நிரப்புவோம் என்று அல்லாஹ் கூறுகிறான்

அல் அராப் 7 - 16,17,18

யா அல்லாஹ் இத்தகைய கூட்டத்தில் இருந்து எனக்கும் எனது குடும்பத்தார்களுக்கும் உலகத்தில் உன்னை பின்பற்றும் நன் மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பாயாக .. நீயே எங்களை பாதுகாக்க போதுமானவன் ஆமீன் .

இதனை அறிந்தும் நாம் சிந்திக்காமல் அறியாமல் இருந்தால் அல்லாஹுவின் வேதனை நம் மீது சாட்டலாம் அல்லாஹ் என்னையும் உங்களையும் அல்லாஹ் தனது வேதனையிளிருது பாதுகாப்பானாக ஆமீன்

அல்லாஹுவின் சாபத்தோடு நம்மை நெருங்கி நாலா புறங்களிலும் சூழ்ந்திருக்கும் சைத்தான் இன்றைய தினம் அவனின் சபதத்தை வெற்றிகொண்டிருக்கிறான் என்ற அளவிற்கு உலகில் குழப்பங்களும் அனாச்சாரங்களும் மானக்கேடான விசியங்களும் இலஹுவான ஒன்றாக மாறிவிட்டது அல்லாஹ் இதிலிருந்து பாதுகாப்பானாக ஆமீன்

மார்க்க அரிஞர்கள் குரிபிடுகின்றார்கள் அல்லாஹுவின் ரஹ்மாத்தால் தான் ஷைத்தான் நான்கு பக்கத்தை மட்டுமே சொன்னான் மேலும் இரு வலிகள் அல்லாஹ் நமக்கு காட்டி தந்திருக்கிறான் ஷைத்தானின் சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க மேல்புறம் மற்றொன்று கீழ்புறம் இதனைப்பற்றி விளக்கும் பொழுது மார்க்க அறிஞர்கள் குறிபிடுகிறார்கள் கீழ் புறம் மூலம் சுஜூதில் அல்லாஹுவிடம் நெருங்கலாம் அல்லது மேல்புறம் நமது துஆக்களின் முலம் அல்லாஹுவை நெருங்கலாம்

மேலும் சைத்தான் கூறுகிறான்

நிச்சயமாக அவர்களை நான் வலிகேடுப்பேன் அவர்களுக்கு வீணான ஆசையை உண்டாக்குவேன் நிச்சயமாக நாம் அவரளுக்கு கட்டளை இடுவேன் அப்பொழுது கால்நடையின் காதுகளை அவர்கள் அறுத்துவிடுவார்கள் இன்னும் அவர்களை நான் ஏவுவேன் அல்ல்ஹுவின் சிருஷ்டி(களின் கோலங்)களை அவர்கள் மாற்றி விடுவார்கள் (என்று சைத்தான் கூறுகிறான் ) மேலும் எவர் அல்லாஹுவை அன்றி இத்தகைய சைத்தானை பாத்துகாவலனாக எடுத்துக்கொண்டாரோ நிச்சயமாக அவர் தெளிவான நஷ்டத்தை அடைந்துவிட்டார்

(சைதானாகிய )அவன் அவர்களுக்கு வாக்களிக்கிறான் அவர்களுக்கு வீணான ஆசைகளையும் ஊட்டுகிறான் மேலும் ஏமாற்றத்தை தவிர (வேறு எதையும் ) சைத்தான் அவர்களுக்கு வக்களிப்பத்தில்லை

இத்தகையோர் தாங்கும் இடம் நரகம்தான் அவர்கள் அதை விட்டும் தப்பி ஓடும் இடத்தை அவர்கள் காண மாட்டார்கள்

அன் நிஷா 4-119,120,121

மேலும் சைத்தான் மறுமை நாள் அன்று கூறுகிறான்

" தீர்ப்பு கூறப்பட்ட பின்னர் சைத்தான் (இவர்களிடம் ) நித்ச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறிதியை வாக்களித்திருந்தான் (அவ்வாறே நிறைவேற்றியும் விட்டான்) நானும் உங்களுக்கு (பொய்யானதை ) வாக்களித்தேன் ஆனால் நான் உங்களுக்கு (கொடுத்த வாக்கில் ) மாறு செய்தேன் . நான் உங்களை அழைத்தேன் நீங்கள் எனக்கு பதில் கூறினீர்கள் என்பதை தவிர எனக்கு யாதொரு அதிகாரமும் உங்கள் மீது இல்லை ஆதலால் நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள் (திட்டாதீர்கள் ) உங்களை நீங்களே நிந்தித்துக்கொல்லுங்கள் நான் உங்களை காபற்றுபவனும் அல்ல நீங்கள் என்னை காப்பாற்றுபவரும் அல்ல முன்னர் நீங்கள் என்னை (அல்ல்ஹுவிர்க்கு ) இணையாக்குவதை நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று அவன் (சைத்தான் கூறுவான் )

இவ்வளவு அல்லாஹ் பச்சபுள்ளைக்கு சொல்லி குடுக்குறமாதிரி சொல்லி குடுக்குறான் அனாலும் நம் மக்கள் அவார்கள் சைதானுடைய பேச்சைத்தான் கேட்டுக்குட்டு இருக்காங்க .. அல்லாஹ் என்னையும் உங்களையும் இந்த சைத்தானுக்கு ஆட்பட்ட கூட்டத்தில் இருந்து பாதுகாப்பு தருவானாக . அல்லாஹு அக்பர்

மேலும் நமது தலைப்பிற்கு நாம் செல்வோம் இவ்வாறு நபி ஆதம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு சிரம்பணிய செய்தான் நிராகரிக்க அவர் அல்லாஹுவிடம் தர்கித்தான் ஆதலால் அதற்கு பின்னால் நடந்த விசியங்கள் அனைத்தும் உங்களுக்கு புரிந்திருக்கும்

மேலும் அல்லாஹ் நபி ஆதம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நீங்களும் உங்களது மனைவியும் இந்த சொர்கத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் ஆனால் ஒரு மரத்தை சுட்டிக்காட்டி அல்லாஹ் இந்த மரத்தை நெருங்க வேண்டாம் என்று கட்டளை இட்டான் . அவ்வாறே அவர்களும் சிறிதுகாலம் சுகம் அனுபவித்தார்கள் பிறகு சைத்தான் தனது சூழ்ச்சியை அரங்கேற்றினான் அவர்களிடம்
அவர்களிடம் சைத்தான் இம்மரத்தை அல்லாஹ் ஏன் உங்களை நெருங்கவேண்டாம் என்று கூறினான் என்றால் அதனை புசித்தால் நீங்கள் இருவரும் மலக்குகள் ஆகிவிடுவீர்கள் , அப்பொழுது தான் நீங்கள் இந்த சொர்கத்தில் நிரந்தரமாக தங்கி இருக்கலாம் . அவன் மேலும் கூறுகிறான் உங்களுக்கு நான் நல்லுபதேசம் செய்வதற்காகவே
அன்றி வேறெதற்காகவும் இதனை நான் கூறவில்லை என்று அவன் சத்தியமும் செய்தான் . நமது தந்தை ஆதமும் தனது ஆசையால் இந்த சொர்கத்தில் இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் அன்று உலகம் அறியாத நம் தந்தை சைத்தானின் சூழ்ச்சிகள் அறியாத நம் தந்தை அந்த பலத்தை உண்டுவிட்டர்கள் உண்டவுடன் அவர்களது வெட்கத்தலங்கள் வெளிபடையாயிற்று அவர்கள் இருவரும் சொர்கத்தில் உள்ள மரங்களில் உள்ள இலைகளை வைத்து அதனை மறைக்க முற்பட்டனர் அப்பொழுது அல்லாஹ் இவ்விருவரையும் அழைத்து உங்களை இம்மரத்தின் பக்கம் நெருங்கவேண்டாம் என்று உங்களிடம் கூறவில்லையா நிச்சயமாக சைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று உங்களுக்கு நான் கூறவில்லையா என்று வினவினான் அதற்கு அவர்கள்.

" எங்கள் ரட்சகனே எங்களுக்கு நாங்களே அநீதம் இளைத்துக்கொண்டோம் நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியவில்லை என்றால் நாங்கள் நஷ்டவாலிகளை ஒருவராக ஆகிவிடுவோம் என்று அவ்விருவரும் கூறினார்கள் .

(அதற்கு அல்லாஹ் இதிலிருந்து ) நீங்கள் இறங்கிவிடுங்கள் உங்களின் சிலர் மற்ற சிலருக்கு பகைவர்களாக இருப்பீர்கள் பூமியில் உங்களுக்கு தங்குமிடம் உண்டு அதில் ஒரு காலம் வரை சுகமனுபவித்தலும் உண்டு என்று (அல்லாஹ் ) கூறினான்

அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள் அதிலேயே நீங்கள் இறப்பீர்கள் (பின்னர் ஒரு நாளில் ) அதிலிருந்து வெளியாக்க படுவீர்கள் " என்று கூறினான்

அல் அராப்ஹ் 7 -23,24,25,26

இவ்வாறு நமது தந்தை இப் பூமியில் இருக்கப்பட்டர்கள் மேலும் இறக்கும் முன் அல்லாஹ் கூறுகிறான்

மேலும் நாம் கூறினோம் " நீங்கள் இருவரும் இதிலிருந்து இறங்குங்கள் பின்னர் என்னிடமிருந்து நிட்சயமாக நேர்வழி வரும்பொழுது அன்நேர்வளியை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை அவர்கள் கவலை அடையவும் மாட்டார்கள் "

இன்னும் நிராகரித்துவிட்டு நம் வசனங்களை பொய்யாக்கி கொண்டுமிருக்கிறார்கள் அத்தகையோர் அவர்கள் நரக வாசிகள் அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்

அல் பகரா 2- 38,39
மேலும் அல்லா கூறுகிறான் மேலும் எவர் தம் நல்லுபதேசத்தை புறக்கநிக்கிராரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது மேலும் மறுமை நாளில் அவனை குருடனாகவே எழுப்புவோம்
(அதுசமயம் ) என் ரட்சகனே என்னை ஏன் குருடனாக எழுப்பினாய் ? நான் திட்டமாக உலகத்தை பார்கிரவனாக இருந்தேனே என்று கேட்பான்

(அதற்கு ) அவ்வாரே நம் வசனங்கள் உன்னிடம் வந்தன அதனை நீ மறந்து விட்டாய் அவ்வாறே நீயும் இன்றையதினம் (நம் அருளில் இருந்து ) மறக்க படுகிறாய் என்று அல்லாஹ் கூருவான்

எனவே தனது இரட்சகனின் வசனங்களை விசுவாசிக்காது வரம்பு மீறி நடக்கின்றவருக்கு இவ்வாரே நாம் கூலி கொடுப்போம் (அவனுக்கு கிடைக்கும் ) மறுமை வேதனையே மிக கடுமையானதும் .நிரந்தரமானதுமாகும்

தாஹா 20-124,125,126,127

நண்பர்களே இந்த வசனங்கள் யாருக்காக இருக்கப்பட்டிருக்கும் என்பதை சிந்தித்துபாருங்கள் ஏன் என்றால் என்னுடைய அறிவின் படி எனக்கு விளங்கியது என்ன வென்றால் இக்குரான் உலக மக்களுக்கு சொந்தமானது என்பது நாம் அறிந்ததே அனால் இக்குரான் யாருடைய கையில் இருக்கின்றது என்பதை நாம் சிந்திக்க கடமை பட்டிருக்கிறோம்

இக்குரான் முஸ்லீம்களின் கையில் மட்டுமே இன்றைய நிலையில் இருக்கிறது ஆனால் நாம் அதன் வசனங்களை நம்புகிறோம் ஆனால் அதன் படி நடக்கிறோமா என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் அல்லாஹ் மிக்க மன்னிபவனும் கருனையாலனுமாய் இருக்கிறான் இனியாவது நம் அவனின் கட்டளைக்கு இணங்கி ஐவேளை தொழுகையை முறையாக பேணி அல்லாஹுவ்டம் பாவமன்னிப்பு தேடுவோம்

நமது நாயகம் சல்லல்லாஹு அலைகி வசல்லம் கூறியிருக்கிறார்கள் தொழுகைதான் முஸ்லிமுக்கும் முஸ்லீம் அல்லாதவருக்கும் உள்ள வித்தியாசம் அத்தகைய தொழுகையை விட்டு நாம் பெயரில் முஸ்லீமாக இருந்து அல்லாஹுவிடம் கண்ணியத்தை தேடினால் எப்படி அல்லாஹ் கொடுப்பான் அவன் உங்கள் எஜமானனா இல்லை ?

மேலும் ஆதம் அலைஹி வசல்லம் எங்கு இறக்க பட்டார்கள் என்பதில் பல கருத்துக்கள் உள்ளது சில உலமாக்கள் குறிபிடுகிறார்கள் இலங்கையில் ஆதம்ஸ் பீட் என்ற இடம் இப்பொழுது சிவனடி பாதம் என்று ஹிந்துக்களால் வணகப்படுகிறது மேலும் மற்றவர்கள் கூறுகிறார்கள் மக்காஹ் அருகில் இறக்கப்பட்டார்கள் என்பது எங்கு இறக்கினான் என்பதை ஆல்ஹுவே அறிந்தவன் .

மேலும் நமது தந்தையையும் தாயையும் அல்லாஹ் நாற்பது ஆண்டுகாலம் பிரித்து வைத்ததாகவும் மக்காவில் சிறிது தூரத்தில் உள்ள அரபாவில் ஜபருல்ரஹ்மத் என்ற மலையில் தான் இவ்விர்வரும் சந்தித்து கொண்டார்கள் என்பது உலமாக்களில் கருத்தாகும் .

. மேலும் அவர்கள் அல்லாஹுவிடம் மன்றாடியதால் அவரின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு குழந்தை செல்வங்களை வழங்கினால் எவ்வாறு வழங்கினான் என்றால் ஒரு ஆன் பெண் போன்றே வழங்கி இருக்கிறான்
மேலும் அல்லாஹ் நமது தந்தைக்கு அல்லாஹ் ஜிப்ரகில் அலைஹி வசல்லம் அவர்களின் மூலம் எவ்வாறு விவசாயம் செய்வது எவ்வாறு இப்பூமியில் வாழ்வது போற்றவற்றை கற்றுகுடுததாக மார்க்க அறிஞர்கள் குறிபிடுகிறார்கள்

அவர்களில் மூத்தவர் காபில்(qabil) மற்றும் ஹாபில் (habil) இவர்களது இருவரின் சகோதரிகளும் மாறி மாறி திருமணம் செய்ய அல்லாஹ் உத்தரவு வழங்கினான் மேலும் அதனை அவர் தந்தை அவர்கள்தாம் பிள்ளைகளிடம் கூறிய பொழுது அவர்களுக்குள் தர்க்கம் ஏற்பட்டது எனது சகோதரியை திருமணம் செய்துகொள்கிறேன் என்று காபில் கூரினார் அதற்கு அவர் தந்தை உங்களின் வேண்டுகோளை உங்களை படைத்த ராப்பிடமே கேளுங்கள் ஆதலால் அவர்கள் காபில் என்பவன் விவசாயம் செய்துகொண்டிருந்தான் ஆதலால் அவர் நெல் கதிரை மலை மேல் வைத்தான் ஹாபில் என்பவர் இடையன் ஆடுமேய்க்கும் வேலை பார்த்துகொண்டிருந்தார் ஆதலால் ஒரு ஆடை மலைமேல் வைத்தார்கள் யாருடைய கூற்றை அல்லாஹ் அங்கிகரிக்கபோகிறான் என்று அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இளையவனார ஹாபில் அவர்களது கூற்றையே அங்கீகரித்தான் அதாவது தந்தை கூறியபடி சஹோதரிகளை மாற்றி திருமணம் செய்ய அல்லாஹ் ஒப்புகொண்டான் ஆதலால் காபில் நீ எதோ சதி செய்துவிட்டாய் என்று நான் உன்னை கொலை செய்ய போகிறேன் இந்த சம்பவத்தை அல்லாஹ் எவ்வாறு விவரிக்கிறான் என்பதை காண்போம்

மேலும் (நபியே ) ஆதமுடைய இருகுமாரர்களின் செய்தியை கொண்டு அவர்களுக்கு ஓதிக்கான்பிபீராக இவ்விருவரும் குர்பானியை (அல்லாஹுவின் பால் சமர்பித்து )நெருக்கமாக்கி இவ்விருவரில் ஒருவரில் இருந்து அது அங்கீகரிக்கப்பட்டது மேலும் மற்றவரில் இருந்து அது அங்கிகரிக்கப்படவில்லை ஆகவே " நிச்சயமாக உன்னை கொலை செய்துவிடுவேன் என்று (அங்கிகரிக்கபடாதவர் ) கூறினார் (அதற்கு அங்கிகரிக்கபெற்றவர் ) அல்லாஹு அங்கிகரிக்கபடுவதெல்லாம் பயபக்தி உடையவர்களில் இருந்துதான் என்று கூறினார்

(மேலும் ) நீ என்னை கொலை செய்வதற்காக உன் கையை என்னளவில் நீட்டினாலும் நான் உன்னை கொலை செய்வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டுபவன் அல்ல ( ஏன் என்றால் )
நிச்சயமாக அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹுவிர்க்கே அஞ்சுகிறேன் என்றார்

என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்தையும் சுமந்த்துகொண்டு வருவதையே நிச்சயமாக நான் நாடுகிறேன் அவ்வாறாயின் நீ நரகவாசிகளில் உள்ளவனாகி விடுவாய் இதுதான் அநியாயக்காரர்களுக்கு உரிய கூலியாகும்

(இதன் பின்னரும் ) தன் சகோதரரை கொளைசெய்வதையே அவரின் மனம் எளிதாக காட்டியது ஆகவே அவரை கொலை செய்து விட்டார் . அதலால் அவர் நஷ்டம் அடைந்தவராக ஆகிவிட்டார்

அல் மாயிதா 5-27,28,29,30

இதன் பின்னர் என்னசெய்வதென்று அறியாமல் இருந்தபோது அல்லாஹ்வின் அருளால் நடந்த சம்பவத்தை நாம் பாப்போம்

பின்னர் பூமியை தொண்டக்கூடிய காக்கையை தன் சகோதரனின் பிரேதத்தை எவ்வாறு அவர் மறைக்க வேண்டும் என்பத்தை காண்பிப்பதற்காக அல்லாஹ் அனுப்பி வைத்தான் (அதை கண்ட ) அவர் என் கேடே இந்த காகத்தை போல் அதர்க்குகூட இயலாதவனாய் நான் ஆகிவிட்டேனா ? (அவ்வாறு நான் இருந்திருந்தாலும் ) என் சகோதரனின் சவத்தை மறைத்திருப்பேன் என்று (அழுது) கூறி கைசெதப்படுபவர்களில் ஒருவராக ஆஹி விட்டார்

அல் மாயிதா 5 - 31

இந்த சம்பவத்தை அடுத்து அல்லாஹ் இந்த உலகுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறான் என்ன வென்றால்

எவரொருவர் மற்றோர் ஆத்மாவின் கொலைக்கு பிரதியாகவோ அல்லது பூமியில் உண்டாக்கும் குலப்பத்திர்க்காகவோ அன்றி (அநியாயமாக மற்றொருவரை ) கொலை செய்கின்றார்களோ அவர்கள் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவர்களை போலாவார்கள் என்றும் எவர் அதனை (ஓர் ஆத்மாவை ) வாழவைக்கின்றாரோ அவர்கள் மனிதர்கள் யாவரையும் வாழவைத்தவர்கள் போலாவார்கள்
என்று இஸ்ராயிலின் மக்களுக்கு நாம் விதியாக்கி விட்டோம் மேலும் நம்முடைய தூதர்கள் பலர் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது அப்பால் நிச்சயமாக அவர்களில் பெருபாலானோர் இதற்கு பின்னரும் இப்பூமியில் வரம்பு மீரியவர்கலாகவே இருக்கிறார்கள்.
ஆகவே இவ்வசனம் நமக்கு உணர்த்துவது என்ன வென்றால் அல்லாஹ் ஒரு முஸ்லிம் காப்பற்றவேண்டும் என்று சொல்லவில்லை ஒரு ஆத்மா அது யாராக இருந்தாலும் சரியே அல்லாஹுவின் கூற்று மிக சாத்தியமானது . ஆதலால் மற்றவர்களுக்கு உதவ முற்படுவோம் இன்ஷா அல்லாஹ் இன்றைய தினம் பல இடங்களில் பல மக்கள் அதில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் கொடுமை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என்பதை உங்கள் கேள்வியாகவே நான் விட்டு விடுகிறேன் அல்லாஹ் அணைத்து மக்களையும் காக்க அவனே அல்லாஹுவே போதுமானவன் , இன்றையதினம் மற்றவர்களுக்காக உதவிதான் செய்ய மனமில்லை அல்லாஹுவிடம் ஒரு நொடி ஒதுக்கி அவர்களுக்காக துஆ கேட்கக்கூட நமக்கு மனமில்லை என்பதுதான் மிகவும் கேவலத்திற்கு உரிய விசியம்.

மேலும் நமது தந்தை ஆதம் அலைஹி வசல்லம் அவர்கள் இப்பூமியில் 940 வருட காலம் வாழ்ந்தார்கள் இவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த ஆயுள் 1000 ஆனால் இவர்கள் தனது அறுவது வயதை யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு கொடுக்க அல்லாஹுவிடம் பரிந்துரை செய்ததாக பல மார்க்க அறிஞர்கள் குறிபிடுகிறார்கள் அனைத்தையும் அல்லாஹுவே மிக்க அறிந்தவன் .

அல்ஹம்து லில்லாஹ் ரப்பில் ஆலமீன்

யா அல்லாஹ் எதனை இன்றைய தினம் எங்களுக்கு அறிய வைத்தாயோ அதன்படி எங்களை அமல் செய்ய வைப்பாயாக ஆமீன்

என்னையும் என்னுடைய பெற்றோர்களையும் என்னுடைய சந்ததிகளையும் என்னுடைய குடும்பத்தார்களையும் என்னுடைய நண்பர்களையும் என்னுடைய உற்றார் உறவினர்களையும் நேர்வழியில் செலுத்துவாயாக மேலும் மரணிக்கும் பொழுது முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தண்டருள்வாயாக மேலும் மறுமை நாழிள் எழுப்பும் பொழுது எங்களை நல்லோர்களுடன் சாளிகாணவர்களுடன் சஹீதானவர்களுடன் எழுப்புவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

நண்பர்களே இன்றைய தினம் அதம் அலைஹி வசல்லம் அவர்களின் சுருக்கமான வரலாறை மட்டுமே பதிய முடிந்தது இதனில் உள்ள விசியங்கள் அனைத்தும் உண்மையானவை இதில் தவறு ஏதேனும் தென்பட்டால் உடனே அல்லாஹுவிர்க்காக அதனை தெரியபடுத்த பரிந்துரை செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் இதை படித்து பிறகு உங்களது நண்பர்களுக்கு எத்திவைய்யுங்கள் . அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்
அல்லாஹ் இப்பணியை அவன் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்

No comments