Breaking News

துபாயில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் 4 மணி நேரம் தாமதமாக வந்தது!


திருச்சி, ஆக. 27:
துபாயில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் 4 மணி நேரம் தாமதமாக வந்தது.


துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் மதியம் 2.40 மணிக்கு திருச்சி வந்து பின்னர் மீண்டும் பிற்பகல் 3.50 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும்.


ஆனால் நேற்று இந்த விமானம் வழக்கமாக வரும் நேரத்துக்கு வர வில்லை. இதனால் இந்த விமானத்தில் வரும் பயணிகளை வரவேற்க வந்த உறவினர்கள் அதிர் ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விமான நிலைய வட்டாரத்தில் விசாரித்த போது, நிர்வாக காரணங்களுக்காக விமா னம் தாமதமாக வரும் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த விமா னம் இரவு 7 மணிக்கு திருச்சி வந்து 8.15 மணிக்கு துபாய் புறப்பட்டு சென் றது.

இதுபோல் கடந்த 20ம் தேதி துபாய்&திருச்சி ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் 7 மணிநேரம் தாமதமாக வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.