Breaking News

50 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட்: 2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்கிறது!


துபாய்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2011–ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காள தேசம் இணைந்து நடத்தியது. 2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலும், 2019–ம் ஆண்டு இங்கிலாந்திலும் நடக்கிறது. 2023–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது.


இந்தியா மட்டுமே தனியாக உலக கோப்பையை நடத்துகிறது. இதற்கு முன்பு 1987–ல் பாகிஸ்தானுடன் இணைந்தும், 1996–ல் பாகிஸ்தான், இலங்கையுடன் இணைந்தும், 2011–ல் இலங்கை, வங்காள தேசத்துடன் இணைந்தும் நடத்தியது. தற்போது 2023–ல் பிப்ரவரி–மார்ச் மாதங்களில் இந்தியாவில் மட்டும் நடைபெறுகிறது.