Breaking News

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரும் செப்.,13ல் சிறப்பு குறைதீர் கூட்டம் !


திருச்சி மண்டல பாஸ்போர்ட்   அலுவலகத்தில் விண்ணப்பதாரர் நலன் கருதி, செப்டம்பர், 13ம் தேதி சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் கூறியதாவது:திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், நாள்தோறும், 12 ஆயிரம் பாஸ்போர்டுகள் மட்டும் வழங்கப்படும். 

புத்தகம் பிரிண்ட் செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, கடந்த ஜூலையில், 25 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து காத்திருந்தனர். நாளென்றுக்கு, 700 பாஸ்போர்ட் புத்தகங்கள் அச்சிட முடியும்.


அலுவலர்களின் வேலை நேரத்தை நீட்டிப்பு செய்து, மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாளொன்றுக்கு, 2,500 புத்தகங்கள் வீதம், 10 நாளில், 25 ஆயிரம் புத்தகங்கள் பிரிண்ட் செய்து, கடந்த மாதம், 36 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கினோம்.போலீஸாரின் விசாரணை முடிந்தும் பாஸ்போர்ட் புத்தகம் கிடைக்காதவர்கள், மரக்கடை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு காலை, 10 மணி முதல், 12 மணி வரை நேரில் வந்து குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

தவிர, விண்ணப்பித்து நீண்ட நாட்கள் காத்திருப்போர் வசதிக்காக, செப்டம்பர், 13ம் தேதி பாஸ்போர்ட் குறைதீர் முகாம் நடைபெறும் என்று தெரிவித்தார்.