Breaking News

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.



☛ முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில்                      தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும். 

☛ அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில்                          அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும். 

☛ இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும். 

☛ பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க                                    முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும். 

☛ இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும். 


☛ சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு        வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

☛ பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார்                              சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு               ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும். 

☛ மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ     அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி                               அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 

☛ அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு                  துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு                செய்வார். 

☛ சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6                                      மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை                            இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும். 


☛ இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி      தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.