Breaking News

பூம்புகாரின் வரலாற்றை அறிவோம்...

பூம்புகார், சங்க காலத்தின் பெரும்புகழ்ப் போற்றலுக்கு உரிய சோழர்களின் நாடறிந்த தலைநகராயும் துறைமுக நகராயும் திகழ்ந்து காவேரி ஆறு வங்கக் கடலுடன் கூடும் இடத்தில் (இற்றை நாகப்பட்டின மாவட்டத்தில்) சூழமைவு கொண்டுள்ளது. இந்நகர் காவிரிக்கு கரையின் இரு புறத்தும் நான்கு காவதம் வரையான நீளத்திற்கு தன் சிறகுகளைப் பரப்பி இருந்தது என்று நம்பப்படுகின்றது.

இந்நகருக்கு கல்வெட்டு மற்றும் இலக்கிய மேற்கோள்கள் உள்ளன. கி.மு. 2 ஆம் நூற்றாண்டினதாக நாள்குறிக்கத்தக்க சாஞ்சிக்கு அருகே உள்ள பார்அட்டு (Barhut) கல்வெட்டு ஒன்றில் இந்நகரத்தின் சோமா என்ற பௌத்தத் துறவாட்டி ஒருத்தி ஒரு குவிமாடத்தின் (stupa) அடைப்பிற்காக பலகக்கல் ஒன்றை நன்கொடையாக ஈந்தாள் என்று சொல்லப்பட்டு உள்ளது.
பண்டை நாள்களில் பூம்புகார் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு உள்ளது இதாவது, புகார், காவிரிப்பூம்பட்டினம், காகந்தி, சம்பாபதி, சோழப்பட்டினம் மற்றும் காவேரிப் பண்டப்பெருநிலையம் (Kaberis Emporium) என்று.

சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியனவும், பிராகிருத ஆக்கங்களான மிலிந்தபனகா, அபிதம்மவதரம், புதோஹவகட்டகதா, பௌத்த சாதகங்கள் தவிர அயலார் குறிப்புகளான தாலமியின் நிலநூல், எரித்திரியக் கடலைச் சுற்றிச்சூழ்ந்த கடற்செலவு குறித்த மொட்டைச் செய்திகள் மற்றும் பிளைனியின் ஆக்கங்கள் போன்றனவும் இந்நகரின் தொல்பழமை குறித்தும், இந்நகர் மீதான மக்களிடையான மதிப்பு குறித்தும் ஒரு ஒளிவெள்ளத்தை எறிகின்றன.

பூம்புகார் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி என மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு இருந்தது. மருவூர்ப்பாக்கம் கடற்கரை மீதும் அதனை ஒட்டியும், பட்டினப்பாக்கம் மேற்குப் பக்கத்திலும், அதே நேரத்தே நாளங்காடி முன்னை இரு வட்டாரங்களுக்கு நடுவேயும் என இடம் கொண்டு இருந்தன.

மருவூர்ப்பாக்கம் அயல்நாட்டு வணிகரது குடியிருப்புகள், மணச்சரக்குகள் (spices), நறுமணப் பொருள்கள் (perfumes), மலர்கள் ஆகியன விற்கும் விற்பனையாளர்கள், பருத்தி பட்டு ஆடைகளை நெய்யும் நெசவாளர்கள், அருமணிகள் (precious stones) மற்றும் இறைச்சிவடிநீர் (gravy) விற்கும் கடைகளைக் கொண்ட தெருக்கள் தவிர கைவினைஞர்கள், இசைவாணர்கள், சிற்பிகள் மற்றும் வலைஞர்களால் அணிசெய்யப்பட்டுக் கிடந்ததாக வண்ணிக்கப்பட்டு உள்ளது.

பட்டினப்பாக்கத்தில் சிவன், முருகன், விண்ணன் முதலாயோர் கோவில்கள், அரண்மனைகள், அரசகுடி மரபினர், அமைச்சர்கள், படை அதிகாரிகள், செல்வச் சீர்மையுள்ள வணிகர்கள், பெரு நிலக்கிழார்கள் தவிர நடனமாடிகள் ஆகியோர் உறையும் பெரிய தெருக்கள் ஆகியன இடம்கொண்டிருந்தன.

நாளங்காடி மருவூர்ப்பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடையே ஒரு இயற்கையான சோலையில் இடங்கொண்டிருந்தது. இது இரு பகுதி குடியிருப்பாளருக்கும் எளிதில் அணுகத்தக்கதாய் இருந்தது.

மேலே குறித்துச்சொல்லப் பெற்ற பிரிவுகள் தவிர அங்கே இலவந்திகைச் சோலை, உய்யவனம், கவேரவனம், சம்பாபதிவனம் மற்றும் உவவனம் என்று அழைக்கப்பட்ட எண்ணற்றச் சோலைகளும் தோட்டங்களும் இருந்தன. வெள்ளிடைமன்றம், இளஞ்சிமீனபூமி மற்றும் பாவைமன்றம் எனப்படும் மன்றங்களும் அங்கிருந்தன.

அங்கு நோக்கர்களையும் (visitors) மகளிரையும் வரவேற்கின்ற தோரணவாயில் எனப்படும் மேற்புடைப்பு நுழைவாயில்களும், முத்துப் பந்தல் எனப்படும் முத்துக் கொட்டகைகளும் இருந்தன. 

இந்நகர் இளஞ்சேட் சென்னி, நளங்கிள்ளி, கரிகால்வளவன் என அடுத்தடுத்து அரசப்பட்டம் ஏற்ற சோழ அரசர்களால் ஆளப்பட்டு வந்ததாக நம்பப்படுகின்றது. பின்வரும் தமிழ்ப் புலவர்கள் இந்நகரைப் பிறந்தகமாகக் கொண்டவர்கள். அவருள் அடங்குவோர் காரிக்கண்ணனார், சேந்தன்கண்ணனார் மற்றும் மிகப் பலர் ஆவர். இத்துறைமுக நகரம் சங்க இலக்கியத்தில் தெள்ளிதாக வண்ணிக்கப்பட்டு உள்ளது. இது வாணிகச்சரக்கை சரியாக அளவிட்டு முறையாகச் சோழ முத்திரையிட்டு ஏற்றுமதி செய்யும் ஒரு சுறுசுறுப்பான துறைமுக நகரம். இதையொப்பவே, வட பகுதிகளினின்றும் அதேபோல் தெனகிழக்கு ஆசிய நாடுகளினின்றும் வாணிகச்சரக்குகள் (merchandise) இந்நகரில் குவியலுற்றன. 

கங்கைத்துறை வட்டாரம், ஈழம், சாவா ஆகிய இடங்களிலிருந்தும் இடையிடையே வந்து சேர்ந்த கப்பல்கள் மணச்சரக்குகள் முதலாய இறக்குமதிகளை ஏந்திவந்தன என்பதுவும் திரட்டப்பட்டு உள்ளது. 

இந்நகருக்கு வட இந்தியாவில் இருந்து, குறிப்பாக மராட்டியத்தில் இருந்து கலைஞர்களும், கட்டடக்கலைஞர்களும் கோவில்களையும் அரண்மனைகளையும், கட்டடங்களையும் பெருமனைகளையும் உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டனர் என்பதை நோக்குவதற்கு ஆர்வமாகவே உள்ளது.
அத்தகையதொரு வியப்பார்ந்த, பெருஞ்சிறப்புள்ள நகரம் இயற்கைப் பேரிடர் காரணமாக அடிக்கடலில் அமிழ்ந்துப் போய்விட்டதாகச் சொல்லப்படுகின்றது...

கருத்துகள் இல்லை