நாகையில் நில அதிர்வு
நாகையில் வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நாகையில் கடந்த 1-ஆம் தேதி முதல் பலத்த மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணிக்கு நாகை எருத்துக்காரத் தெருவில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டதால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவு சுமார் 11 மணிக்கு சில நொடிகள் நில அதிர்வு இருந்ததாகவும், அதன் பின்னர் பெரும் சப்தம் ஏற்பட்டதாகவும் சிலர் தெரிவித்தனர். பெரும் சப்தத்துக்குப் பின்னர் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மேலும் ஒரு பெரும் சப்தம் அந்த வீதியில் கேட்டதாகவும் வேறு சிலர் தெரிவித்தனர். எருத்துக்காரத் தெருவைச் சேர்ந்த பெரும்பாலானோர் தாங்கள் நில அதிர்வை உணர்ந்ததாகத் தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் தெரிவித்தது : வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. தரையில் அமர்ந்திருந்த நிலையில் இந்த நில அதிர்வை மிகத் துல்லியமாக என்னால் உணர முடிந்தது என்றார்.நில அதிர்வு ஏற்பட்ட சில நிமிஷங்களில் அப்பகுதி மக்கள்