Breaking News

பாகிஸ்தானுக்கு எதிரான ரி 20 போட்டியிலிருந்து உபுல் தரங்க விலகல்


இந்த மாத இறுதியில் பாகிஸ்தானின் லாஹூர் நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கெதிரான ரி -20 போட்டியில் இருந்து உபுல் தரங்க விலகுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அணித் தலைவரின் இந்த முடிவானது அவருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ரி-20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கையை வழிநடாத்தும் வாய்ப்பினையும் இல்லாமல் செய்துள்ளது. ஏனெனில், இலங்கை கிரிக்கெட் மூன்று போட்டிகளிலும் விளையாட சம்மதம் தெரிவிக்கும் ஒரு இலங்கை குழாமே இத்தொடருக்காக அறிவிக்கப்படும் என முன்னர் குறிப்பிட்டிருந்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடிவரும் இலங்கை குழாத்தில் காணப்படும் சகல துறை வீரர் திசர பெரேரா மற்றும் ஏனைய இரண்டு வீரர்கள் மாத்திரமே பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள ரி-20 போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். தரங்க இலங்கை அணியில் இல்லாது போகின்றமையினால் அவரது பொறுப்பினை அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா பெற்று இலங்கை அணியினை தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தனது காயத்தில் இருந்து மீண்டு பூரண சுகத்தைப் பெறும் இறுதித் தருவாயில் உள்ள குசல் பெரேரா, தன்னுடைய காயம் தற்போது எவ்வாறு உள்ளது என்பதை MRI பரிசோதனை செய்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் நல்ல முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் இலங்கையினை அவர் தலைமை தாங்கலாம்.
இலங்கை அணிக்காக ரி-20 போட்டிகளில் வழமையாக விளையாடும் வீரர்களான தில்ஷான் முனவீர, அஷான் பிரியன்ஞன் மற்றும் இசுரு உதான ஆகிய வீரர்களும் இலங்கை கிரிக்கெட் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர். அதோடு, ஏனைய வீரர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.
இலங்கை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் 40 வீரர்கள் கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால அவர்களிடம், லாஹூரில் நடைபெறும் போட்டியில் விளையாட விரும்பமின்மையினை கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர். தற்போது தங்கள் முடிவுகளை சில வீரர்கள் மாற்றியிருப்பதாக தெரிய வந்திருக்கின்ற போதிலும் லசித் மாலிங்க போன்ற முக்கிய சில வீரர்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்தும் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடிவரும் இலங்கை குழாத்தில் காணப்படும் சகல துறை வீரர் திசர பெரேரா மற்றும் ஏனைய இரண்டு வீரர்கள் மாத்திரமே பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள T-20 போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். தரங்க இலங்கை அணியில் இல்லாது போகின்றமையினால் அவரது பொறுப்பினை அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா பெற்று இலங்கை அணியினை தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தனது காயத்தில் இருந்து மீண்டு பூரண சுகத்தைப் பெறும் இறுதித் தருவாயில் உள்ள குசல் பெரேரா, தன்னுடைய காயம் தற்போது எவ்வாறு உள்ளது என்பதை MRI பரிசோதனை செய்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் நல்ல முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் இலங்கையினை அவர் தலைமை தாங்கலாம்.