Breaking News

புதிய 10 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி..

                                   
சண்டிகர், 
2005 மகாத்மா காந்தி வரிசையில் புதிய 10 ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. 
இந்த புதிய 10 ரூபாய் நோட்டின் பின்புறம் 2014 என ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும்.  ரூபாய் நோட்டின் நம்பரிங் பேனலில் 'எம்' என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய கீழ், மேல் வரிசை எண்கள் அச்சிடப்படும். 
ஆனால், நோட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு முந்தைய 2005 மகாத்மா காந்தி நோட்டுக்களை போலவேதான் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.